என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இரணியல் அருகே மாடியில் இருந்து விழுந்து கூலி தொழிலாளி பலி
- முதலுதவி சிகிச்சைக்குப்பின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.
- அவரது மகன் சுதீஷ் (வயது 26) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல், ஜூன்.30-
இரணியல் அருகே உள்ள ஆலங்கோடு தெற்குவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 57). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் காலை ஆலங்கோட்டை சேர்ந்த பேபிகுமார் என்பவரது வீட்டின் இரண்டாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் அவரது பின்பக்கம் கழுத்து, வலது தோள்பட்டை, இடது கை ஆகிய பகுதிகளில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சுதீஷ் (வயது 26) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்