search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி அருகே கடையில் சிக்கிய புகையிலை பொருட்கள்
    X

    செஞ்சி அருகே கடையில் சிக்கிய புகையிலை பொருட்கள்

    • செஞ்சி அருகே கடையில் புகையிலை பொருட்கள் சிக்கியது.
    • அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் கஞ்சனூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அன்னியூர் கிராமத்தில் புகையிலைப் பொருட்கள் குறித்து திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக் கடையில் சோதனை செய்ததில் பஞ்சாட்சரம் மகன் விஜயன் (வயது 36) என்பவர் தனது கடை மற்றும் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு புகையிலை பொருட்கள் பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரிடமிருந்து . ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்

    Next Story
    ×