என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்
- சிகிச்சை பலனின்றி 4 வயது குழந்தை ஹரீஷ் உயிரிழந்தான்.
- கிணற்றில் வீசி தாய் தற்கொலைக்கு முயன்றது எதற்காக? குடும்ப பிரச்சினையா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி அருகேயுள்ள கம்பைநல்லூர் உடசல்பட்டிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ரிக் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி கலைவாணி(26). இவர்களுக்கு ஹரீஷ் (4) மற்றும் கதிர்வேல் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று கலைவாணி தனது வீட்டின் முன்பு உள்ள கிணற்றில் 2 குழந்தைகளையும் திடீரென தூக்கி வீசிவிட்டு அவரும் குதித்தார்.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். கிணற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்த தாய் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி 4 வயது குழந்தை ஹரீஷ் உயிரிழந்தான். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் தற்கொலைக்கு முயன்றது எதற்காக? குடும்ப பிரச்சினையா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்