search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    சங்கரன்கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தங்கவேல் சிறப்புரை ஆற்றினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தேரடி திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் இறைத்தூதர் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி பாராளுமன்ற தொகுதி செயலாளர் அருண் சங்கர் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் கற்பக ராஜ், செயலாளர் ராஜா சிங், சங்கரன்கோவில் நகர செயலாளர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் தொகுதி செயலாளர் பீர் ரகுமான் வரவேற்று பேசினார்.

    மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தங்கவேல் சிறப்புரை ஆற்றினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் பசும்பொன், முல்லை நில தமிழர் விடுதலை கட்சி கண்ணன், தேவேந்திர சேனா தலைவர் ராஜ் பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கண்ணன், பாண்டி, விஜயகுமார், அந்தோணி, எபினேசர், ராமசாமி பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கரன்கோவில் தொகுதி தலைவர் சாந்தகுமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×