என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஏற்காடு மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள் விபத்து
- ஏற்காடு மலைப்பாதையில் மோட்டார் சைக்கிள் திருமணமான 25 நாட்களில் புதுப்பெண் விபத்தில் தந்தையுடன் பலி.
- தந்தையும், மகளும் ஏற்காட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றிப்பார்க்க சென்ற போது விபத்து ஏற்பட்டது.
ஏற்காடு:
அரியலூர் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 67). இவருடைய மகள் லோகேஸ்வரி (24). இவருக்கும், கன்னங்குறிச்சியை சேர்ந்த கோகுல்நாத் என்பவருக்கும் கடந்த 3-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணம் ஆன புதுப்பெண்ணான தனது மகளை பார்க்க இளங்கோவன் கன்னங்குறிச்சிக்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை தனது மகளை அருகில் உள்ள ஏற்காட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றிப்பார்க்க அழைத்து சென்றார். அங்கு தந்தையும், மகளும் பல்சுவேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு பிற்பகலில் கன்னங்குறிச்சிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மாலை 3.30 மணியளவில் 5-வது கொண்டை ஊசி வளைவை அடுத்துள்ள சிறிய திருப்பத்தில் மோட்டார் சைக்கிள் வந்தது. அங்கு திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் ஓடியது . பின்னர் மலைப்பாதை தடுப்புச்சுவரில் மோதி அதனை உடைத்து கொண்டு, கீழே உள்ள 40 அடி பள்ளத்தில் பாய்ந்தது.
இந்த கோர விபத்தில், மோட்டார் சைக்கிள் கீழே விழுந்த இடத்தின் அருகே உள்ள 4-வது கொண்டை ஊசி வளைவு அருகே தந்தையும், மகளும் பறந்து வந்து விழுந்தனர். இதில் ரோட்டில் தலை மோதியதில் லோகேஸ்வரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இளங்கோவன் படுகாயம் அடைந்து உயிருக்கு போரானார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், ஏற்காடு போலீசார் விரைந்து வந்து இளங்கோவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து விபத்தில் பலியான இளங்கோவனின் மகளின் உடலும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. தந்தை-மகள் இருவரின் உடலும் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்ட நிலையில் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கிடையே அங்கு வந்த அவரது உறவினர்கள் அங்கு நின்று கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.
திருமணம் ஆன 25 நாட்களில் புதுப்பெண், தனது தந்தையுடன் ஏற்காட்டை சுற்றிப்பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிய போது விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அவர்களது சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து ஏற்காடு போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளங்கோவல் சற்று வேகமாக வந்த நிலையில் அவரால் வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்ப முடியாமல் நேராக விட்டதால் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு கீழே விழுந்தும், இதில் தலை உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டதால் 2 பேரும் அடுத்தடுத்து இறந்த சோகமாக நிகழ்வும் நடந்திருப்பதும் தெரிய வந்தது. மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்