என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அதிக மாத்திரைகளை தின்று மகனுடன், தற்கொலைக்கு முயன்ற தாயும் உயிரிழப்பு - பத்தமடை போலீசார் விசாரணை
- மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்து வாலிபர் அதிக மாத்திரகைளை தின்று மயங்கி விழுந்தார்.
- மகன் தற்கொலை செய்ததால் மனமுடைந்த தாயும் அதிக மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பத்தமடை அருகே உள்ள மேலச்சடையான்குளம் மறவர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). கட்டிடதொழிலாளி.
தகராறு
இவருக்கு திருணமாகி உமா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 22-ந் தேதி கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் உமாகணவருடன் கோபித்துக்கொண்டு தனது குழந்தையுடன் செய்துங்கநல்லூர் அருகே கருங்குளத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனம் உடைந்த மணிகண்டன் அதிக மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அவரது தாய் மீனாவும் அதிக மாத்திரைகளை தின்றார். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மீனாவை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தாயும் உயிரிழப்பு
இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதுதொடர்பாக பத்தமடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்