என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாதாந்திர பராமரிப்பு பணி - டவுன், பேட்டையில் 20-ந் தேதி மின்தடை
- பழைய பேட்டை ,பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (20-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்ப்புற வினியோக பிரிவு செயற் பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பழைய பேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (20-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் டவுன் மேலரத வீதி பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதேபோல டவுன் எஸ்.என்.ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்திரோடு, சுந்தரர் தெரு, பாரதியார் தெரு, சி.என்.கிராமம், குறுக்குத்துறை, கருப்பந்துறை, டவுன் கீழ ரத வீதி, போஸ் மார்க்கெட், ஏ.பி.மாடத்தெரு, சுவாமி சன்னதி தெரு, அம்மன் தெரு, மேல மாட வீதி, கள்ளத்தி முடுக்கு தெரு, நயினார் குளம் ரோடு தெரு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில் தெற்கு தெரு, ராம் நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகளிலும் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மேலும் மின்னோட் டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின் பாதையை பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்