search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு
    X

    பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.

    சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

    • சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 11 பவுன் நகை திருடப்பட்டது.
    • பேரையூர் டி.எஸ்.பி. இலக்கியா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவி ராஜா(61). இவர் விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இவர் குடும்பத்துடன் கடந்த 19-ந் தேதி சாமி கும்பிட பழனிக்கு சென்றார். நேற்று இரவு வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 11 பவுன் நகை, ரூ.4 ஆயிரம் திருடுபோனது தெரிய வந்தது.

    இதுகுறித்து கள்ளிக்குடி காவல்நிலைய போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.பேரையூர் டி.எஸ்.பி. இலக்கியா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். துப்பறியும் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணையை

    தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×