என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது
- மதுரையில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர்.
மதுரை
மதுரை ஆத்திகுளம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). இவர் சம்பவத்தன்று பீ.பி.குளம் மெயின்ரோட்டில் நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த அகிம்சாபுரத்தைச் சேர்ந்த பாபு மகன் ராஜாமைதீன் (24), செல்லூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த நெல்லை கார்த்திக் (24) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500யை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து2 பேரையும் கைது செய்தனர்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் முத்து (26).
இவர் மெயின்ரோட்டில் நடந்து சென்றபோது நேதாஜி மெயின்ரோட்டைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (26) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார். ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்தனர்.
ராணிபேட்டை மாவட்டம், சோளிங்கர்பாறைமேட்டு தெருவைச் சேர்ந்தவர் சதீஷ். மதுரை வந்த இவர் ஆரப்பாளையம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 1000-த்தை பறித்துச் சென்றது.
இதுகுறித்த புகாரின் பேரில் கோமஸ்பாளையத்தைச் சேர்ந்த திருப்பதிசெல்வம் மற்றும் 17 வயது வாலிபரை கரிமேடு போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்