search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் விபத்தில் வாலிபர் சாவு
    X

    பைக் விபத்தில் வாலிபர் சாவு

    • மதுரை அருகே நடந்த பைக் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை உசிலம்பட்டி அடுத்த குப்பனாம்பட்டி, தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (40) நேற்று மதியம் இவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    வைகை வடகரை, அம்மா பாலம் அருகே சென்றபோது, எதிரில் வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயக்குமார் படுகாயம் அடைந்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மேல பொன்னகரம், வெங்கடேஸ்வரன் (19) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×