search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் விஷம் குடித்து சாவு
    X

    வாலிபர் விஷம் குடித்து சாவு

    • திண்டுக்கல்லில் மாயமான வாலிபர் மதுரையில் விஷம் குடித்து இறந்தார்.
    • மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த வெள்ளை பாண்டி மகன் முத்துவேல் (வயது 23). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீெரன மாயமானார்.

    இதுபற்றி அவரது தாயார் சாந்தி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவேலை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மதுரை பாண்டி கோவில் நுழைவு வாயில் அருகே வாலிபர் ஒருவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவரிடம் விசாரித்த போது, திண்டுக்கல்லில் மாயமான வாலிபர் அவர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவரது தாய் சாந்தி திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு வந்தார். இந்த நிலையில் முத்துவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×