என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொடுக்கல்-வாங்கல் தகராறு: 5 பேர் மீது வழக்கு
- கொடுக்கல்-வாங்கல் தகராறு காரணமாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இதுகுறித்த புகாரின்பேரில் திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் பாண்டியனிடம் விசாரணை நடத்துகின்றனர்.
மதுரை
தனக்கன்குளம், முல்லை நகரை சேர்ந்தவர் பாண்டியராஜ் (54). இவர் பாலசுப்பிரமணியம் நகர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அருண்பாண்டியன் (31) என்பவரிடம் ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 500 கடன் வாங்கினார்.
அதில் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 500-ஐ திருப்பி செலுத்தி விட்டார். மீதமுள்ள ரூ. 1 லட்சத்துக்கு காசோலை கொடுத்தார். அது வங்கியில் பணமின்றி திரும்பி விட்டது. பாண்டியராஜ் நேற்று நண்பர்களுடன் திருநகர் 8-வது பஸ் நிறுத்தம் டீக்கடை முன்பு நடந்து சென்றார். அங்கு வந்த அருண்பாண்டியன் அவரை தாக்கி விட்டு தப்பினார்.இதுகுறித்த புகாரின்பேரில் திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் பாண்டியனிடம் விசாரணை நடத்துகின்றனர்.
இதே வழக்கில் அருண்பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் பாண்டியராஜ், ராஜபாண்டி, காளிமுத்து, பார்த்தசாரதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்