search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை
    X

    கன்னிமார் கோவில்

    கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை

    • காஞ்சரம்பேட்டை கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
    • பல்வேறு வண்ண பூமாலைகள், பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடந்தன.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் காஞ்சரம்பேட்டையை அடுத்த பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், கொரோனா தொற்று இல்லாமல் குறைந்து மக்கள் நலமுடன் வாழ கூட்டு பிரார்த்தனைகள் நடந்தது.

    இதையொட்டி 7 கன்னிமார் அம்மன்களுக்கும் சிறப்பு பூஜைகள், சம்மங்கி, ரோஜா, மல்லிகை, அரளி, முல்லை,செவ்வந்தி, உள்ளிட்ட பல்வேறு வண்ண பூமாலைகள், பட்டாடைகள், அணிவிக்கப்பட்டு, தீபாராதனைகளும் நடந்தது.

    இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அங்குள்ள பேசும் கன்னிமார் கோயில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    முன்னதாக சித்தி விநாயகர், மந்தை கருப்புசாமி கோவிலிலும் பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பாறைபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×