search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 மாணவர் தற்கொலை
    X

    பிளஸ்-2 மாணவர் தற்கொலை

    • மதுரையில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • அவர் தேர்வு சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது.

    மதுரை

    மதுரை சோலையழகுபுரம் ஆட்டுமந்தை சந்து பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன் மகன் பிரவீன் கார்த்திக் (வயது 17). இவர் அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சமீபத்தில் பிளஸ்-2 பரீட்சை எழுதினார். இதில் அவர் சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது.

    வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரவீன் கார்த்திக் சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருநகர், பர்மா காலனியைச் சேர்ந்தவர் சங்கர் (30). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த சங்கர் சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை உச்சபரம்புமேடு ஜானகி தெருவைச் சேர்ந்த நாகராஜன் மனைவி மலர்விழி (25). கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மலர்விழி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×