search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது
    X

    வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

    • வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருப்பதியை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பாக்கியநாதபுரம், ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்தவர் சேகர் (56). இவர் நேற்று மதியம் தத்தனேரி காபி கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த, அதே பகுதியை சேர்ந்த திருப்பதி (35) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.400-ஐ பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருப்பதியை கைது செய்தனர்.

    Next Story
    ×