search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் கடைகளில் முறைகேடு செய்த விற்பனையாளர்களுக்கு அபராதம்
    X

    ரேசன் கடைகளில் முறைகேடு செய்த விற்பனையாளர்களுக்கு அபராதம்

    • ரேசன் கடைகளில் முறைகேடு செய்த விற்பனையாளர்களுக்கு அபராதம் விதித்தது.
    • இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளின் விற்பனையாளர்களுக்கு ரூ.49ஆயிரத்து 50 அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளை ஜூலை மாதத்தில் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலான பறக்கும்படையினர் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது வேலை நேரத்தில் கடை திறக்காமலும், ரேசன் பொருட்களை முறையாக விநியோகம் செய்யாமலும், இருப்புக் குறைவு மற்றும் இருப்பு கூடுதல் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேசன் கடைகளின் விற்பனையாளர்களுக்கு ரூ.49ஆயிரத்து 50 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதே போன்று நியாயவிலைக் கடையை குறித்த நேரத்தில் திறக்காமல் இருப்பது, ரேசன் பொருட்கள் முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் நியாயவிலைக்கடையின் விற்பனையாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×