search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இணைப்பு ரெயில்களை பிடிக்க முடியாமல் பயணிகள் அவதி
    X

    இணைப்பு ரெயில்களை பிடிக்க முடியாமல் பயணிகள் அவதி

    • இணைப்பு ரெயில்களை பிடிக்க முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
    • ரெயில் நிலையங்களில் ரெயில்கள் ஒன்றையொன்று இணைப்பு பெற்று பயணிகள் பயன்பெறும் வகையில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    மதுரை

    மதுரை, மானாமதுரை ரெயில் நிலையத்தில் இணைப்பு ரெயில்களை பிடிக்க முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

    ராமேசுவரத்திலிருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் பயணிகள் ரெயிலில் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி செல்ல பயணிகள் வருகின்றனர்.

    இவர்கள் மானாமதுரை ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து மன்னார்குடி செல்லும் டெமு ரெயிலில் பயணம் செய்வார்கள்.

    ராமேசுவரம்-மதுரை ரெயில் மானாமதுரை வருவதற்கு முன்பாக மன்னார்குடி செல்லும் ரெயில் புறப்பட்டு விடுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    அதே போல் ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரெயிலில் வரும் பயணிகள் மதுரையில் இறங்கி திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வார்கள்.

    ராமேசுவரம்-மதுரை ரெயில் வருவதற்கு முன்பாக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு விடுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    மதுரை ரெயில்வே கோட்டத்தில் மானாமதுரை, மதுரை சந்திப்பு ரெயில் நிலையங்களில் ரெயில்கள் ஒன்றையொன்று இணைப்பு பெற்று பயணிகள் பயன்பெறும் வகையில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×