search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில்- கச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ெரயில்
    X

    நாகர்கோவில்- கச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ெரயில்

    • நாகர்கோவில்- கச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ெரயில் 2-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    நாகர்கோவில்- கச்சிகுடா இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது.

    அதன்பிறகு அந்த ரெயில் இயக்கப்படவில்லை. நாகர்கோவில்-கச்சிகுடா வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில்களை மீண்டும் இயக்குவது என்று தென்னக ெரயில்வே முடிவு செய்து உள்ளது.

    இந்த ரெயில் அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து சனிக்கிழமைதோறும் காலை 8.40 மணிக்கு கச்சிகுடா எக்ஸ்பிரஸ் புறப்படும். இது வள்ளியூர் (9.17), நெல்லை (10.15), கோவில்பட்டி (11.14), சாத்தூர் (11.36), விருதுநகர் (12.03), மதுரை (மதியம் 1.10), திண்டுக்கல் (2.07), திருச்சி (3.15), கரூர் (மாலை 5 மணி), நாமக்கல் (5.40), சேலம் (இரவு 7 மணி), ஜோலார்பேட்டை (8.48), வாணியம்பாடி (9.08), குடியாத்தம் (9.44), காட்பாடி (10.25), சித்தூர் (நள்ளிரவு 11.03 மணி), திருப்பதி (12.30) வழியாக ஞாயிற்றுக்கிழமை மாலை 1.25 மணிக்கு கச்சிகுடா செல்லும்.

    மறுமார்க்கத்தில் கச்சிகுடாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 3.45 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரெயில், திருப்பதி (நள்ளிரவு 10.09), சித்தூர் (அதிகாலை 3.58), காட்பாடி (5.05), குடியாத்தம் (5.35), வாணியம்பாடி (6.09), ஜோலார்பேட்டை (6.50), சேலம் (8.35), நாமக்கல் (9.40), கரூர் (10.20), திருச்சி (12) திண்டுக்கல் (மதியம் 1.07), மதுரை (2.10), விருதுநகர் (2.58), சாத்தூர் (3.22), கோவில்பட்டி (3.44), நெல்லை (மாலை 5.10 மணி), வள்ளியூர் (5.44) வழியாக நாகர்கோவிலுக்கு திங்கட்கிழமை இரவு 9.05 மணிக்கு செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×