என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வெவ்வேறு சம்பவங்களில் குழந்தைகளுடன் பெண்கள் மாயம்
- மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் குழந்தைகளுடன் பெண்கள் மாயமானார்கள்.
- கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை
மதுரை பெத்தானியா புரம் முல்லை வீதியைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வம். இவரது மனைவி காயத்திரி (வயது 30). இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2-ம் வகுப்பு படிக்கும் யோகிதா ஸ்ரீ என்ற 7 வயது மகள் இருக்கிறாள்.
காயத்திரி பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் பேக்கரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இவரது தாய் வீட்டின் அருகே வசிக்கும் தங்கப்பாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து தங்கப்பாண்டி மனைவி அபிநயா கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேரையும் அழைத்து எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி காயத்திரியையும், அவரது மகள் யோகிதா ஸ்ரீயையும் தங்கபாண்டி அழைத்துச் சென்று விட்டார். அவர்கள் எங்கே சென்றார்கள்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து காயத்திரியின் தாயார் செல்வி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு புட்டுத்தோப்பு மந்தையைச் சேர்ந்தவர் ஜெயராமன். ஞாயிற்றுக்கிழமை சந்தையில் லோடுமேனாக உள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி (22). இவர்களுக்கு அரவிந்த் (5) என்ற மகனும், ஹன்சிகா என்ற ஒன்றரை வயது மகளும் உள்ளனர்.
ஜெயராமன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வார். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி காலை ராஜேஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. 3 பேரும் எங்கே சென்றனர்? என்று தெரியவில்லை.
இதுகுறித்து ராஜேஸ்வரி யின் தாயார் ஜெயபாரதி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்