என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேலூர் நாகம்மாள் கோவில் திருவிழா
- மேலூர் நாகம்மாள் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
- 3 அடி முதல் 20 அடி நீளம் வரை உள்ள வாயில் அலகு குத்தி 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர்.
மேலூர்
மேலூர் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள நாகம்மாள் கோவிலின் ஆடி திருவிழா இன்று நடந்தது.
இதையொட்டி மேலூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் மேலூர் மண் கட்டி தெப்பக்குளத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரிய கடை வீதி, செக்கடி பஜார் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. நேர்த்திக்கடன் நேர்த்திய பக்தர்கள் 3 அடி முதல் 20 அடி நீளம் வரை உள்ள வாயில் அலகு குத்தி 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்தனர். நாளை மாலை பெண்கள் பங்கேற்கும் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.
திருவிழாவையொட்டி மேலூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி தலைமையில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் 100-க்கும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்