search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாலை மலர் செய்தி எதிரொலி: தாழ்வாக சென்ற மின்கம்பி சீரமைப்பு
    X

    தாழ்வாக இருந்த மின்கம்பி உயரமாக செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    மாலை மலர் செய்தி எதிரொலி: தாழ்வாக சென்ற மின்கம்பி சீரமைப்பு

    • மாலை மலர் செய்தி எதிரொலியால் தாழ்வாக சென்ற மின்கம்பி சீரமைக்கப்பட்டது.
    • இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட நேசனேரி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு 5 முறை பஸ்கள் வந்து செல்கின்றன.

    இந்த பஸ்களில் திருமங்கலம் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் சென்று படித்து வந்தனர். கிராம மக்கள், கல்லூரி மாணவர்கள் இந்த அரசு பஸ்களை நம்பி இருந்தனர். இந்த நிலையில் நேசனேரி- செங்கப்படை ரோட்டில் அமைந்துள்ள மின் கம்பிகள் உயரம் குறைந்து தாழ்வா னதாலும், மழைக்கு சாலைகள் குண்டு குழியுமாக இருந்ததாலும் நேசனேரி கிராமத்திற்குள் வராமல் அரசு பஸ்கள் கடந்த 3 தினங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்த செய்தி மாலை மலரில் வெளியானது.

    மின்வாரிய அதிகாரிகள் தாழ்வாக இருந்த மின்கம்பங்களை சரி செய்தனர். மேலும் குண்டும் குழியுமான சாலையில் மண் பரப்பப்பட்டு சீராக அமைக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அரசு பஸ் நேசனேரி கிராமத்திற்கு வந்து சென்றது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×