search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் முற்றுகை போராட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாய தொழிலாளர்கள்.

    விவசாயிகள் முற்றுகை போராட்டம்

    • உசிலம்பட்டியில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
    • விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் போராட்டம் நடத்தினர்.

    உசிலம்பட்டி

    விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், உசிலம்பட்டி 58 கிராம விவசாயிகள் பாசன சங்கத்தினர் ஊர்வலமாக வந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர்.

    பின்னர் கோட்டாட்சியர் சங்கரலிங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. விவசாய நிலங்களில் மின்சார வாரியம் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆர்ப்பாட்டம்

    ஆகஸ்டு புரட்சி தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொழிலாளர்களை பாதிக்கும் திட்டங்களை கண்டித்து உசிலம்பட்டி திருமுருகன் கோவில் முன்பு விவசாய சங்க தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய செயலாளர் மார்க்கண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் பாண்டியன்,

    சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் பொன். கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சங்கத் தலைவர் பாலு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு ஒன்றிய செயலாளர் ராமர், அறிவு, விவசாய சங்கம் குமாரசாமி, பாண்டி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    Next Story
    ×