search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப தகராறில் எலக்ட்ரீசியன் தற்கொலை
    X

    குடும்ப தகராறில் எலக்ட்ரீசியன் தற்கொலை

    • குடும்ப தகராறில் எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஆஸ்டின்பட்டி, தோப்பூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவர் தனியார் டைல்ஸ் கம்பெனியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை பிரபுவுக்கும், அவரது மனைவி ேகாகிலா (34) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கோகிலா மீன் வியாபாரம் செய்வதற்காக வெளியில் சென்றுவிட்டார். அவர் மதியம் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் பிரபு தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்து ெகாண்ட பிரபுவுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    Next Story
    ×