என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில் திருவிழாவில் தகராறு: 3 பேர் கைது
- கோவில் திருவிழாவில் தகராறில் லோடுமேனை கொல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மதுரை
தல்லாகுளம், ராஜீவ் காந்தி நகரில் உள்ள காளியம்மன் கோவிலில் கடந்த 5-ந் தேதி முதல் திருவிழா நடந்து வருகிறது. சம்பவத்தன்று இரவு 3 பேர் கும்பல் கோவில் வாசலில் கட்டப்பட்டு இருந்த ட்யூப் லைட்டுகளை அடித்து உடைத்து தகராறு செய்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி இளையராஜா மற்றும் முருகன், காசிநாதன், ஈஸ்வரன் ஆகியோர் தட்டி கேட்டனர். ஆத்திரம் அடைந்த 3 பேரும் அவர்களை அரிவாளால் வெட்ட பாய்ந்தனர்.
இதுகுறித்து இளையராஜா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கோவில் திருவிழாவில் தகராறு செய்த பி.பி குளம் நேதாஜி மெயின் ரோடு செல்லபாண்டி மகன் ஜோதிபாசு (19), முல்லை நகர் செல்வராஜ் மகன் கணேசன் (20), பி.பி.குளம் இந்திரா நகர், முனியாண்டி கோவில் தெரு வேல்முருகன் மகன் பொன்பாண்டி (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்