என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சோழவந்தான் கோவில்களில் தர்ப்பணம் செய்து வழிபட்ட பக்தர்கள்
Byமாலை மலர்26 Sep 2022 7:26 AM GMT
- சோழவந்தான் அருகே திருவேடகம், அணைப்பட்டி ஆகிய வைகை ஆறு உள்ள பகுதியில் தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
- முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக இந்த வழிபாடு நடப்பது வழக்கம்.
சோழவந்தான்
முன்னோர்களுக்கு வழிபாடு செய்யும் முக்கிய புனித தலங்களாக ராமேசுவரம், திருப்புவனம், திருவேடகம் உள்ளது. புரட்டாசி மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக பக்தர்கள் வழிபாடு செய்வார்கள். நேற்று மகாளய அமாவாசையையொட்டி திருவேடகம், சோழவந்தான், அணைப்பட்டி ஆகிய வைகை ஆறு உள்ள பகுதியில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். அதன் பிறகு இந்த பகுதியில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திருவேடகம் சாய்பாபா கோவில் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X