search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த குழந்தை சாவு
    X

    மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த குழந்தை சாவு

    • மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த குழந்தை இறந்தது.
    • திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    உச்சபரம்புமேடு, ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த சேர்ந்தவர் மனோ. கூலித் தொழிலாளி. இவருக்கு ஒன்றரை வயதில் அஸ்விதா என்ற பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று காலை அஸ்விதா மாடிப்படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தது.

    இதில் பலத்த காயமடைந்த குழந்தையை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் காண்பித்தனர். அந்த குழந்தைக்கு சிகிச்சை செய்த டாக்டர்கள், குழந்தைக்கு ஒன்றும் இல்லை, கவலைப்பட வேண்டாம்' என்று கூறி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் குழந்தை நேற்று நள்ளிரவு திடீரென வீட்டில் மயங்கி விழுந்தது. உறவினர்கள் குழந்தையை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்விதா பரிதாபமாக இறந்தாள். திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×