search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவியிடம் நகை பறிப்பு
    X

    கல்லூரி மாணவியிடம் நகை பறிப்பு

    • கல்லூரி மாணவியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ளே சிவரக்கோட்டை பாண்டியன் நகரை சேர்ந்தவர் லட்சுமி கருப்பாயி(வயது 18). இவர் விருதுநகர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை இவர திருமங்கலம் மாயோன் நகரில் உள்ள சகோதரியை பார்ப்பதற்காக தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், லட்சுமி கருப்பாயியை பின் தொடர்ந்து வந்தார். திடீரென அந்த வாலிபர், கல்லூரி மாணவி அணிந்திருந்த ஒரு பவுன் செயினை பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் லட்சுமி கருப்பாயி புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×