search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் பறித்தவர் கைது
    X

    செல்போன் பறித்தவர் கைது

    • தொழிலாளியை கத்தியால் குத்தி பணம், செல்போன் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
    • ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் கத்தியால் சங்குபாண்டியை குத்திவிட்டு அவர் வைத்திருந்த ரூ. 1000-த்தை பறித்தது.

    மதுரை

    மதுரை கணேசபுரம் ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 24). இவரது சகோதரர் சங்குபாண்டி (26). கட்டிட தொழிலாளியான இவர்கள் சம்பவத்தன்று நள்ளிரவு தத்தனேரி மயான பகுதியில் மது அருந்தினார்கள்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணராஜா மகன் பீடை சூர்யா (19), தவளை சரவணன், திரவியம், ரெண்டு மண்டை ஆகிய 4 பேர் சங்குபாண்டியிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் பணம் தருமாறும் கத்தியை காட்டி மிரட்டினர். ஆனால் சங்குபாண்டி பணம் தர மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் கத்தியால் சங்குபாண்டியை குத்திவிட்டு அவர் வைத்திருந்த ரூ. 1000-த்தை பறித்தது. இதனை தடுக்க வந்த மருதுபாண்டியையும் அந்த கும்பல் தாக்கி அவரது செல்போனையும் பறித்துச் சென்றன. கத்தியால் குத்தப்பட்ட சங்குபாண்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்தி பணம் பறித்த பீடை சூர்யாவை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×