என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு
- மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
- இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மின் விபத்து அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. மதுரை மாநகரில் நேற்று முன்தினம் மின்சாரம் தாக்கி பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த நிலையில் செக்கானூரணியில் 8-ம் வகுப்பு மாணவன் குளிர்சாதன பெட்டியை திறந்தபோது மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுரை செக்கானூரணி மனோகரன் மகன் பாலமுரளி (வயது 14). இவர் அங்கு உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். பாலமுரளியின் தந்தை மனோகரன், அதே பகுதியில் மட்டன் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பாலமுரளி இரவு கடைக்கு சென்றார். அப்போது மட்டன் கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியை தற்செயலாக திறந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பாலமுரளி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுரளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்