search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமியை கர்ப்பமாக்கிய  வாலிபர் போக்சோவில் கைது
    X

    கைதான தனுஷ்.

    சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

    • சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்தனர்.
    • தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனுசை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை செல்லூரை சேர்ந்த 17 வயது சிறுமி தாயார் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இவரது தந்தை சிறுவயதிலேயே பிரிந்து சென்று விட்டார். சிறுமியின் தாயார் அதே பகுதியில் உள்ள இரும்பு கம்பெனியில் வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

    சிறுமிக்கும், சீனி நாயக்கன் பட்டியைச் சேர்ந்த கணேசன் மகன் தனுஷ் (வயது 20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

    தனுஷ் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். அதிர்ச்சி அடைந்த சிறுமி தனுஷிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். அவர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து சிறுமி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

    போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தர வின்படி வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் உதவி கமிஷனர் அக்பர் கான் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி தனுஷ் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனுசை கைது செய்தனர்.

    Next Story
    ×