என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண் வியாபாரி மீது தாக்குதல்
- மதுரை அருகே மனைவியை உருட்டுக்கட்லையால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
- கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
அனுப்பானடி, ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 29). கூலி தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி (26). அருண்குமாருக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவர் இது தொடர்பாக மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். சம்பவத்தன்று இரவு கலைவாணி வீட்டில் இருந்தார். அங்கு வந்த அருண்குமார் குடிப்பதற்காக பணம் கேட்டார். கலைவாணி தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த அருண்குமார் மனவியை உருட்டு கட்டையால் தாக்கி விட்டு தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.
பசுமலை, பேரக்கா நகரை சேர்ந்த மகேஸ்வரன் மகன் பிரவீன் (வயது 24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (40) என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடை வைத்து நடத்தி வருகிறார்.
பிரவீனுக்கும், ஜீவானந்தம் என்பவருக்கும் கடையை காலி செய்வது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. பிரவீன் நேற்று மதியம் கடையில் இருந்தார். அங்கு வந்த ஜீவானந்தம், அத்துமீறி கடைக்குள் புகுந்து பிரவீனை அடித்து உதைத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவானந்தத்தை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்