search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலூரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
    X

    மேலூரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

    • மேலூரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.

    மேலூர்

    மேலூரில், மதுரை புறநகர் அ.ம.மு.க. வடக்கு மாவட்டத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். தேர்தல் பிரிவு செயலாளரும், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான மகேந்திரன், பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். வருகிற ஜூலை 30-ந் தேதி மதுரையில் நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

    கூட்டத்தில் மேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சாமி மகன் ஆசையன் சாமி, மேலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சோமாசி, காஞ்சி கமல், மேலூர் நகர் செயலாளரும், மேலூர் நகர்மன்ற கவுன்சிலருமான ஆனந்த், மேலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், மதுரை கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய செயலாளர்கள் திருமோகூர் சரவணன், பாஸ்கரன், சிவக்குமார், செல்வகுமார், சேதுராமன், செந்தில் குமார், முன்னாள் கவுன்சிலர் துரை, பிரசாத், ரமேஷ், சந்தைப்பேட்டை யாசின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×