என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அம்மன் கோவில் திருவிழா
- சவுபாக்கிய யோக வாராகி அம்மன் கோவில் உற்சவ விழா நாளை தொடங்குகிறது.
- வருகிற 4-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
மதுரை
மதுரை வில்லாபுரம் அருகே உள்ள எம்.எம்.சி. காலனி காவேரி நகர் 6-வது தெருவில் சவுபாக்கிய யோக வாராகி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலின் உற்சவ விழா நாளை (29-ந் தேதி) தொடங்கி வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது.
முதல் நாளான நாளை காலையில் மகா கணபதி ஹோமம் நடக்கிறது. விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் காலை, மாலையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
3-ந் தேதி மாலை அம்பாளுக்கு காய்கறி அலங்காரமும், உற்சவருக்கு உன்மத்த வராகி அலங்காரமும் நடக்கிறது.
விழாவில் சிகர நிகழ்ச்சியாக வருகிற 4-ந்தேதி சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் காலை 9:15 முதல் 10.15 மணிக்குள் விமரிசையாக நடக்கிறது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி- அம்பாள் திருவீதி உலா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்