search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    X

    அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

    • அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் கொண்டாடினர்.
    • மேலும் அருகே இருந்த பஸ் நிறுத்தத்தில் பயணியர்களுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    திருமங்கலம்

    சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தின் சாவியை இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இதைத்தொடர்ந்து திருமங்கலம் தேவர் சிலை முன்பு மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    மேலும் அருகே இருந்த பஸ் நிறுத்தத்தில் பயணியர்களுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதல் யூனியன் சேர்மன் லதா ஜெகன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி, மாணவரணி மாவட்ட இணைச் செயலாளர் சிவசக்தி, மீனவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் விஜி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைச்செயலாளர் கோடீஸ்வரன், ஒன்றிய அவைத்தலைவர் அன்னக்கொடி, ஒன்றிய துணைச்செயலாளர் சுகுமார், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் முருகன், நிர்வாகிகள் கப்பலூர் சரவணன், கண்ணபிரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×