search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
    X

    பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் ஊராட்சி வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் சரவணன் பார்வையிட்டார்.

    திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு

    • திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • முன்னதாக அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி, பண்ணைகுடி ஊராட்சி களில் நடைபெறும் திட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சேவை மைய கட்டிடம் மற்றும் அங்குள்ள அங்கன்வாடி, பள்ளிக்கூடம், மழைநீர் சேகரிப்பு தொட்டி, மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது யூனியன் ஆணையாளர்கள் கதிரவன், பேராட்சி பிரேமா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா பாலமுருகன், துணைத்தலைவர் ராஜேஷ், ஊராட்சி செயலர் பெரிச்சி மற்றும் யூனியன் பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    முன்னதாக அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி, பண்ணைகுடி ஊராட்சி களில் நடைபெறும் திட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    Next Story
    ×