search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிச்சன் நிறுவனத்தில் வேலை பார்த்த பெண் சாவு
    X

    கிச்சன் நிறுவனத்தில் வேலை பார்த்த பெண் சாவு

    • மதுரை அருகே கிச்சன் நிறுவனத்தில் வேலை பார்த்த பெண் பரிதாபமாக இறந்தார்.
    • இது தொடர்பாக நிறுவன உரிமையாளர்கள் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம், ஈச்சநேரியை சேர்ந்தவர் சுகப்பிரியா. இவர் மதுரை அவனியாபுரம் சந்தோஷ் நகரில் உள்ள ஒரு கிச்சன் உதிரி பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சுகப்பிரியா நேற்று இரவு பணியில் இருந்த இருந்தார். அப்போது அவருக்கு விபத்தில் படுகாயம் ஏற்பட்டது. அவரை சகஊழியர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக சுகப்பிரியாவின் சகோதரர் முத்துவீரன் அவனியாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில் கிச்சன் உபரி பொருட்கள் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் அப்துல் மஜீத் மற்றும் மேற்பார்வையாளர் மீரா மைதீன் ஆகிய இருவரும் பாதுகாப்பு கவசம் இன்றி ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தினர். இதன் காரணமாக என் சகோதரி மரணம் அடைந்து உள்ளார்.

    எனவே போலீசார் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிச்சன் உபரி பொருட்கள் நிறுவன உரிமையாளர் அப்துல் மஜீத் மற்றும் சூப்பர்வைசர் மீரா மைதீன் ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×