என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது
- வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இந்த சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த அமிர்தபாண்டியன் மகன் ஹரி பிரசாத் (23). சம்பவத்தன்று காலை இவர், பூமி உருண்டை தெருவில் நடந்து சென்றார். அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.6 ஆயிரத்து 500-ஐ பறித்து சென்றார்.
இதுகுறித்த புகாரின்பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஆலங்குளம், முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த ரெட் கண்ணன் என்ற வசந்தராஜன் (34) என்பவரை கைது செய்தனர்.
வண்டியூர் ஏஞ்சல் நகர் வாணி முத்து மகன் வஜித்பாலா (24). சம்பவத்தன்று நள்ளிரவு இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்துக்கு வந்தார்.
அப்போது சம்மட்டிபுரம் பாரதியார் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (32) என்பவர் அரிவாளை காட்டி மிரட்டி ரூ.1000-ஐ பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
தென்பரங்குன்றம், விஸ்வகர்மா தெருவை சேர்ந்த அலிகான் மகன் ஷாருக்கான் (24). சம்பவத்தன்று இரவு இவர் கிரிவலப் பாதையில் நடந்து சென்றார். அங்கு வந்த 3 பேர் கும்பல், கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000-ஐ பறித்து சென்றது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக், பாலா, சுறா ஆகியோரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்