search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 குழந்தைகள் மாயம்
    X

    4 குழந்தைகள் மாயம்

    • மதுரையில் 4 குழந்தைகள் மாயமானதாக புகார் எழுந்துள்ளது.
    • திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான குழந்தைகளை தேடி வருகின்றனர்.

    மதுரை

    திருப்பரங்குன்றம், முஸ்லிம் தெருவை சேர்ந்த வசந்தகுமார் மனைவி கொடியரசி (30). இவர் திருப்பரங்குன்றம் போலீசில் கொடுத்த புகார் மனுவில், எங்களின் மகன் கவிமணி சாரதி (10), திருப்பரங்குன்றம் மேட்டு தெரு யோகராஜா மகள் சிவரஞ்சனி (15), அவரது சகோதரர் நிவின் குமார் (9) மற்றும் சக்திவேல் மகன் மாசிலாமணி (15) ஆகிய 4 குழந்தைகளை காணவில்லை. அவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான குழந்தைகளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×