என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
240 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
- 240 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் விரட்டி சென்று 3 பேரை பிடித்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ்ரெபோனியின் மேற்பார்வையில் மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், கீழவளவு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மேலூர் உட்கோட்ட தனி பிரிவு போலீசார், மேலூர் குற்றப்பிரிவு போலீசார் ஆகியோர் மேலூர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது கீழையூர்-அட்டப்பட்டி சந்திப்பு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த ஒரு ஆட்ேடா மற்றும் 2 மோட்டார் சைக்கிளை மறித்தனர். அப்போது அதில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஓடினர். உடனே போலீசார் விரட்டி சென்று 3 பேரை பிடித்தனர். தொடர்ந்து போலீசார் ஆட்டோவை சோதனை செய்தபோது 20 மூடைகளில் 240 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து புகையிலை பொருட்களையும், ஆட்ேடா, 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் மேலூர் ஜோதிநகர் சித்திக் (47), அண்ணாகலணி சாகுல்ஹமீது (56), காந்திஜிபூங்கா அலிப்கான் (47) என தெரியவந்தது.
இவர்களை கைது செய்த போலீசார் புகையிலை பொருட்கள் விற்பனை சம்பந்தமாக வேறு நபர்களுடன் தொடர்பு இருக்கிறதா ? வேறு எங்கு பெரிய அளவில் பதுக்கி வைத்துள்ளார்களா ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்