search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாலை பாதையில் மண் சரிவு எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    ஏற்காடு மலைபாதையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆய்வு செய்த காட்சி.

    மாலை பாதையில் மண் சரிவு எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு

    • காட்டாற்று வெள்ளத்தால் மலைபாதையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையின் நடுவில் விழுந்தது.
    • இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் மண் சரிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் பெய்த கன மழை காரணமாக காட்டாற்று வெள்ளத்தால் மலைபாதையில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையின் நடுவில் விழுந்தது.

    இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஏற்காட்டிற்கு வரும் வாகனங்கள் குப்பனூர் வழியாக திரும்பி விடப்பட்டது.

    இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் மண் சரிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மண் சரிவு ஏற்பட்ட மலைப் பாதையை எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது ஏற்காடு ஊராட்சி ஒன்றியக் குழு துணை தலைவர் சேகர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கோகிலா, சின்னவெள்ளை, ஓன்றிய செயலாளர் ராஜா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் புஷ்பராணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×