என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு பூஜை நடைபெற்ற போது எடுத்தபடம்.
கோவில்பட்டி புற்று கோவிலில் சஷ்டி சிறப்பு பூஜை
- கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி, சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் மாத வளர்பிறை சஷ்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
- வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி, சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் மாத வளர்பிறை சஷ்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பிறகு வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
Next Story