search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் தாய், மகளுக்கு அடி-உதை
    X

    தூத்துக்குடியில் தாய், மகளுக்கு அடி-உதை

    • வீட்டில் துணி துவைத்து விட்டு கழிவுநீரை எதிர் வீட்டு முன்பாக ஊற்றியதாக கூறப்படுகிறது.
    • இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.


    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே நடுசெக்காரக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 22).

    இவரும் இவரது தாய் சண்முகசுந்தரியும் இன்று காலை அவர்களது வீட்டில் துணி துவைத்து விட்டு கழிவுநீரை எதிர் வீட்டு முன்பாக ஊற்றியதாக கூறப்படுகிறது.

    இதனைக்கண்ட எதிர்வீட்டை சேர்ந்த டிரைவர் ஆறுமுகநயினார் (40) அவரது மனைவி ஜெயராணி (35) மற்றும் ஆறுமுகநயினாரின் சகோதரிகள் கவுரி, பேச்சிராணி ஆகியோர் ஜெயலட்சுமியின் வீட்டுக்கு சென்று சத்தமிட்டுள்ளனர்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகநயினார் தரப்பினர் ஜெயலட்சுமி, சண்முகசுந்தரியையும் தாக்கியதாகவும், இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறி தாய், மகள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்தி ரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    Next Story
    ×