search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யு. ஆர்ப்பாட்டம்
    X

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யு. ஆர்ப்பாட்டம்

    • ரயில்வேயை தனியார் மயமாக்கக்கூடாது. ரயில்களை தனியாருக்கு விடக்கூடாது.
    • சுகாதாரப் பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவேண்டும்

    கரூர்

    கரூரில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து எஸ்ஆர்எம்யு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ராணுவத்தில் குறுகிய கால வேலை திட்டமான அக்னிபாத் அமல்படுத்துவதை கண்டித்து சேலம் கோட்ட தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) கரூர் கிளை சார்பில் கிளை செயலாளர் எம்.அன்பழகன் தலைமையில் கரூர் ரயில் நிலைய சந்திப்பு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    துணை செயலாளர்கள் கணேஷ், சுந்தர், ராஜசேகர், பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ராணுவத்தில் அமல்படுத்தப்பட்ட தற்காலிகப்பணி திட்டம் நாளை ரயில்வே துறைக்கும் வரலாம். ரயில்வேயை தனியார் மயமாக்கக்கூடாது. ரயில்களை தனியாருக்கு விடக்கூடாது. சுகாதாரப் பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    Next Story
    ×