search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜனாதிபதிக்கு மாணவர்கள் ராக்கி கயிறு அணிவிக்கும் நிகழ்ச்சி
    X

    ஜனாதிபதிக்கு மாணவர்கள் ராக்கி கயிறு அணிவிக்கும் நிகழ்ச்சி

    • ஜனாதிபதிக்கு மாணவர்கள் ராக்கி கயிறு அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    கரூர்:

    புதுதில்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டத்தில், தமிழக ஆசிரியர்கள் தயார் செய்து அனுப்பிய 'சந்தாலி மொழியில் வாழ்த்துச் செய்தியும் திருக்குறளும் பொறிக்கப்பட்ட ராக்கி கயிறை' இந்திய குடியரசுத் தலைவருக்கு, நாட்டின் வட கிழக்கு பகுதியைச் சேர்ந்தமாணவர் தியா ராக்கி கயிறு அணிவி–க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பா.ஜ மூத்த தலை–வரும், நாடுதழுவிய திருவள்ளுவர் மாணவர் இளைஞர் அமைப்பின் தலைவரும், தமிழ் ஆர்வலரு–மான உத்தரகாண்ட் தருண் விஜய்; கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் முதன்மை முதல்வர் டாக்டர். ராமசுப்பிரமணியன், மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் நம் நாட்டின் முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முன்னதாக கரூர் பரணி கல்வி குழும ஆசிரியர்கள் தயார் செய்த 18 மொழிகளில் திருக்குறள் பொறிக்கப்பட்ட 75,000 ராக்கி கயிறுகள், மாணவர்கள் தயார் செய்த மற்ற 75,000 ராக்கி கயிறுகள் மொத்தம் ஒன்றரை லட்சம் ராக்கி கயிறுகள் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கடந்த வாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×