search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்

    கரூர்

    நொய்யல் புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    வேலாயுதம்பாளையம் அருகே புகழிமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர்,பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல் நொய்யல் மற்றும் வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×