search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு மருத்துவ முகாம்
    X

    சிறப்பு மருத்துவ முகாம்

    • சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    கரூர்:

    வாங்கல் வட்டார சுகாதாரத்துறையின் நடமாடும் சுகாதார மருத்துவமனை சார்பில் தவுட்டுப்பாளையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சத்யந்திரன் தலைமையில் மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு, முகாமில் கலந்து கொண்ட முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினர். இதில், தவுட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    Next Story
    ×