search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்கால் தூர் வார பொதுமக்கள் கோரிக்கை
    X

    வாய்க்கால் தூர் வார பொதுமக்கள் கோரிக்கை

    • வாய்க்கால் தூர் வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சின்னாண்டாங்கோயில் வழியாக செல்லும்

    கரூர்:

    கரூர் மாநகராட்சிக்குட்பட்ட படிக்கட்டுத்துறை பகுதியின் பின்புறம் வழியாக வாய்க்கால் செல்கிறது. சின்னாண்டாங்கோயில் வரை இந்த வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலின் இருபுறமும் நூற்றுக்கணக்கான குடியிருப் புகள் உள்ளன. இந்நிலையில், இந்த வாய்க்காலை ஆக்ரமிக் கும் வகையில் புற்கள் அதிகளவு வளர்ந்து மிகவும் மோச மான நிலையில் உள்ளது. அதிக முட்புதர்கள்வளர்ச்சி காரணமாக, விஷ ஐந்துகளின் புகலிடமாகவும் வாய்க்கால் மாறி வருகிறது. இதனால், குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே, அனைவரின் பாதுகாப்பு கருதி இந்த வாய்க்காலை தூர்வாரி, முட்புதர்களை அகற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×