என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பட்டாயி அம்மன் கோவில் முப்பூசை விழா
- பட்டாயி அம்மன் கோவில் முப்பூசை விழா நடைபெற்றது
- கரகம் பாலித்தலுடன் தொடங்கியது
கரூர்:
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் எழுதியான்பட்டியில் ஸ்ரீபட்டாயி அம்மன் கோயில் உள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட குடிப்பாட்டுக்காரர்களுக்கு குலதெய்வமாகும். இக்கோயில் முப்பூசை தி ருவிழா 100 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. ஸ்ரீபட்டாயி அம்மன், ஸ்ரீகாமாட்சி அம்மன், ஸ்ரீகன்னிமாரம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சுத்த சைவ பூஜையும், காவல் தெய்வங்களான ஸ்ரீமாசி பெரியண்ணசாமி, ஸ்ரீகரிவண்ட ராயர். ஸ்ரீஉத்தண்டிராயர், ஸ்ரீமதுரைவீரன், ஸ்ரீகாத்தவராயன், பட்ட கொளக்காரன், ஸ்ரீநல்லேந்திரன் ஆகிய தெய்வங்களுக்கு முப்பூசை விழா கரகம் பாலித்தலுடன் தொடங்கிய விழா வரும் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்காக மாயனூர் காவிரி செல்லாண்டியம்மன் கோயில் படித்துறையில் பூசாரிகள், பங்காளிகள், மாமன் மைத்துனர்கள், புனித நீராடி, பூஜைகள் செய்வித்த பிறகு கரகம், வேல்கம்பு ஈட்டிகளுடன் பூசாரிகள், சாமியாடிகள் மற்றும் ஏராளமானோர் சுமார் 6 கி.மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். பின்னர் அங்கு பூஜை, மாபூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
முப்பூசையை தொடர்ந்து, கிடாவெட்டு, சாமி கோயிலை வந்தடைதல், காதணி விழாக்கள், முடி இறக்குதல், ஸ்ரீஅக்னி புடவை காரி அம்மனுக்கு சூலை, ஆடு பூஜை அரங்கேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்