என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
87 பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி நலத்திட்ட உதவிகள்
- 87 பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்
கரூர்:
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் மனு உள்ளிட்ட 306 மனுக்கள் பெறப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு ரூ.4,30,800ல் செயற்கை கால்கள், 10 பேருக்கு தலா ரூ.78,850 என மொத்தம் ரூ.7,88,500-ல் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெ ட்ரோல் ஸ்கூட்டர்கள், 3 பேருக்கு தலா ரூ.2,900 என- ரூ.8,700 காதொலி கருவிகள், 2 பேருக்கு ரூ.785 என ரூ.1,570ல் ஊன்றுகோல் என மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும், தாட்கோ திட்டத்தின் கீழ் 58 பேருக்கு ரூ.1,94,38,874- நிலம் வாங்கும் திட்டம் மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தின் சார்பில் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திடத்தில் அரசு மானியத்துடன் தொழில் தொடங்குவதற்கான ஆணைகளையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.90 லட்சத்தில் பல்வேறு தொழிற்கடன் உதவிகளையும் மற்றும் 5 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.9.70 லட்சத்தில் கடனுதவிகள், ஒருவருக்கு வருவாய்த்துறையின் சார்பில் ஆதரவற்ற விதவை சான்று என மொத்தம் 87 பேருக்கு ரூ.2,18,27,619 அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்