search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    87 பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி நலத்திட்ட உதவிகள்
    X

    87 பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி நலத்திட்ட உதவிகள்

    • 87 பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்

    கரூர்:

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் மனு உள்ளிட்ட 306 மனுக்கள் பெறப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு ரூ.4,30,800ல் செயற்கை கால்கள், 10 பேருக்கு தலா ரூ.78,850 என மொத்தம் ரூ.7,88,500-ல் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெ ட்ரோல் ஸ்கூட்டர்கள், 3 பேருக்கு தலா ரூ.2,900 என- ரூ.8,700 காதொலி கருவிகள், 2 பேருக்கு ரூ.785 என ரூ.1,570ல் ஊன்றுகோல் என மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மேலும், தாட்கோ திட்டத்தின் கீழ் 58 பேருக்கு ரூ.1,94,38,874- நிலம் வாங்கும் திட்டம் மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தின் சார்பில் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திடத்தில் அரசு மானியத்துடன் தொழில் தொடங்குவதற்கான ஆணைகளையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.90 லட்சத்தில் பல்வேறு தொழிற்கடன் உதவிகளையும் மற்றும் 5 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.9.70 லட்சத்தில் கடனுதவிகள், ஒருவருக்கு வருவாய்த்துறையின் சார்பில் ஆதரவற்ற விதவை சான்று என மொத்தம் 87 பேருக்கு ரூ.2,18,27,619 அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

    Next Story
    ×