என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குளித்தலை அருகே கார் மோதி 2 பேர் படுகாயம்
- சசிகுமார் (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது நண்பரான குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தியை சேர்ந்த மற்றொரு சசிகுமார் என்பவருடன் குளித்தலைக்கு வந்துள்ளார்
- குளித்தலை- வாளாந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது
கரூர்:
கரூர் குளித்தலை அருகே உள்ள வாளாந்தூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது நண்பரான குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தியை சேர்ந்த மற்றொரு சசிகுமார் என்பவருடன் குளித்தலைக்கு வந்துள்ளார். பின்னர் மீண்டும் வாளாந்தூருக்கு சென்று கொண்டிருந்தார்.
குளித்தலை- வாளாந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் படுகாயமடைந்தனர்.
இதைப்பார்த்து அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் அவர்கள் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்